Monday 5 August 2013

குளிர்பானம் குடித்ததும் உடலுக்குள் நடக்கும் மாற்றங்கள்!

10 நிமிடங்களில், குளிர்பானத்தில் உள்ள சர்க்கரை ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பாய்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இதைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இன்சுலின் தள்ளப்படுகிறது. நிலைமை மோசமடைவதைத் தடுக்க கல்லீரல் பிரச்னையைக் கையில் எடுத்து சர்க்கரையை கொழுப்பாக மாற்றுகிறது.

40 நிமிடங்கள் கழித்து, குளிர்பானத்தில் இருந்த காஃபின் முழுமையாகக் கிரகிக்கப்படுகிறது. அது ரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை கல்லீரல் கட்டுப்படுத்துகிறது. மூளையில் உள்ள அடினோசின் ரியாக்டர், அரைத்தூக்க நிலையைத் தவிர்க்கிறது.

45 நிமிடங்கள் கழித்து உடலில் டோபோமைன் என்ற ரசாயனம் அதிக அளவில் சுரக்கப்படுகிறது. இந்த ரசாயனம்தான் மூளையில் மகிழ்ச்சியான நிலை தோன்றக் காரணம்.

60வது நிமிடங்களில் பாஸ்பரிக் அமிலமானது உடலில் உள்ள கால்சியம், மக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாது உப்புக்களின் அளவைக் குறைக்கிறது.

டாக்டர் விகடன்..

No comments:

Post a Comment